இந்த 32 அபச்சாரம் கோவிலில் செய்தல் பாபத்தை உண்டாக்கும்
- வாகனத்தில் சென்று கோவில் சன்னிதி முன் இரங்குதல் கூடாது & கோவிலுக்கு போகும் போது காலணி அணிதல் கூடாது
- உத்சவம் நடக்கும் போது தரிசனம் செய்யாமல் இருந்தல்
- பகவானை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்காமல் இருந்தல்
- பாதி குனிந்து கொண்டு ஒரு கையால் தரையை தொட்டு சேவித்தல் கூடாது
- பகவானுக்கு முன் ஆத்ம பிரதக்ஷனம் கூடாது
- தீட்டு/ எச்சில் போது தரிசனம் கூடாது
- பகவானுக்கு முன் கால் நீட்டல் கூடாது
- பகவானுக்கு முன் கை மடக்கி முழங்கால் சுற்றி அமர்தல் கூடாது
- சன்னிதானத்தில் படுத்தல் கூடாது
- சன்னிதானத்தில் அமர்ந்து சாப்பிடுதல் கூடாது
- சன்னிதானத்தில் ரகசியம் பேசுதல் கூடாது
- சன்னிதானத்தில் உரத்து பேசுதல் கூடாது
- கோவிலுக்கு தொடர்பில்லாதவை பேசுதல் கூடாது
- கோவிலில் அழுதல் கூடாது
- கோவிலில் கலகம் கூடாது
- அடித்தல்/ தண்டனை கூடாது
- இன்னொருவரை அனுக்ரஹித்தல் கூடாது
- ஸ்த்ரியிடம் கண்ணியம் தவிர்த்தல் கூடாது
- பொதுவில் பேசத்தகாதது பேசுதல் கூடாது
- வாயு பிரிதல் கூடாது
- கம்பலி / போர்வை போர்த்திக்க கூடாது
- அடுத்தவரை வசை பாட கூடாது
- பகவானை தவிர்த்து அடுத்தவரை துதி பாட கூடாது
- சக்தி இருக்கும் போது பகவானுக்கு உபச்சாரம் குறைவாக செய்தல் கூடாது
- திருவாராதனம் செய்யாததை சாப்பிட கூடாது
- காலத்துக்கு உண்டான பழத்தை சமர்பிக்காமல் இருந்தல் கூடாது
- மிச்சத்தை சமர்பித்தல் கூடாது
- பின் முதுகு காட்டி அமர்தல் கூடாது
- இன்னொருவரை வணங்குதல் கூடாது
- ஆசார்யர் புகழ் பாடாமல் இருந்தல் கூடாது
- சுய புகழ் பாடுதல் கூடாது
- தெய்வத்தை இகழ்தல் கூடாது