அடியேனுக்கு தெரிந்த சில:
- திருவாபரணம் – பெருமாளுக்கு சாற்றப்படும் ஆபரணம்
- திருவாராதனம் – பெருமாளுக்கு பூஜை செய்தல்
- பெருமாள் தீர்த்தம் – திருவாராதனம் முடிந்த பின் கொடுக்கப்படும் தீர்த்தம்
- பெரிய திருவடி – கருடன்
- சிறிய திருவடி – அனுமன்
- திருமணி ஸேவித்தல் – பூஜையின் போது மணி அடிப்பது
- திருப்பாவாடை – பிரசாதம் நைவேத்யம் செய்வது
- திருவந்திக்காப்பு – வீதி உலா முடிந்து சமர்பிக்கப்படும் ஆரத்தி
- திருப்பரிவட்டம் – பெருமாள் வஸ்திரம்
- பீதாம்பரம் – பெருமாள் வஸ்திரம்
- திருத்துழாய் – துளசி
- திருஆலவட்டம் – விசிறி
- திருக்காவேரி – பூஜைக்கான ஜலம் வைக்கும் பாத்திரம்
- திருக்காப்பு நீக்குதல் – ஸாலக்கிராமம் எழுந்தருளிய பெட்டியின் கதவை திறப்பது
- கோவிலாழ்வார் – ஸாலக்கிராமம் அல்லது விக்ரஹம் எழுந்தருளிய மரப்பெட்டி
- சாற்றுமுறை – சாற்று (முடிவு) பாசுரங்களை ஒதுதல்
- சாற்றுப்படி – சந்தனம் சாத்துவது அல்லது அலங்காரம்
- வட்டில் – அர்க்யம், பாத்யம் சமர்பிககப்படும் பாத்திரம்
- அடைக்காய் – தாம்பூலம்
- எச்சரிக்கை – பிரசாத கோஷ்டி முடிவு பற்றிய அறிவிப்பு
- திருக்கண் வளருதல் – தூங்குதல்
- அரவணை – பெருமாளின் பாம்புப்படுக்கை
- திருப்பள்ளிக்கட்டில் – பெருமாளின் கட்டில்
- திருநடை சார்த்துவது – கோவில் கதவு முடுதல்
- திருப்பள்ளி எழுச்சி – பெருமாளை துயிலெழுப்புவது
TO BE CONTINUED…