19. பரிபாஷை

அடியேனுக்கு தெரிந்த சில:

  1. திருவாபரணம் – பெருமாளுக்கு சாற்றப்படும் ஆபரணம்
  2. திருவாராதனம் – பெருமாளுக்கு பூஜை செய்தல்
  3. பெருமாள் தீர்த்தம்திருவாராதனம் முடிந்த பின் கொடுக்கப்படும் தீர்த்தம்
  4. பெரிய திருவடி – கருடன்
  5. சிறிய திருவடி – அனுமன்
  6. திருமணி ஸேவித்தல் – பூஜையின் போது மணி அடிப்பது
  7. திருப்பாவாடை – பிரசாதம் நைவேத்யம் செய்வது
  8. திருவந்திக்காப்பு – வீதி உலா முடிந்து சமர்பிக்கப்படும் ஆரத்தி
  9. திருப்பரிவட்டம் – பெருமாள் வஸ்திரம்
  10. பீதாம்பரம் – பெருமாள் வஸ்திரம்
  11. திருத்துழாய் – துளசி
  12. திருஆலவட்டம் – விசிறி
  13. திருக்காவேரி – பூஜைக்கான ஜலம் வைக்கும் பாத்திரம்
  14. திருக்காப்பு நீக்குதல் – ஸாலக்கிராமம் எழுந்தருளிய பெட்டியின் கதவை திறப்பது
  15. கோவிலாழ்வார் – ஸாலக்கிராமம் அல்லது விக்ரஹம் எழுந்தருளிய மரப்பெட்டி
  16. சாற்றுமுறை – சாற்று (முடிவு) பாசுரங்களை ஒதுதல்
  17. சாற்றுப்படி – சந்தனம் சாத்துவது அல்லது அலங்காரம்
  18. வட்டில் – அர்க்யம், பாத்யம் சமர்பிககப்படும் பாத்திரம்
  19. அடைக்காய் – தாம்பூலம்
  20. எச்சரிக்கை – பிரசாத கோஷ்டி முடிவு பற்றிய அறிவிப்பு
  21. திருக்கண் வளருதல் – தூங்குதல்
  22. அரவணை – பெருமாளின் பாம்புப்படுக்கை
  23. திருப்பள்ளிக்கட்டில் – பெருமாளின் கட்டில்
  24. திருநடை சார்த்துவது – கோவில் கதவு முடுதல்
  25. திருப்பள்ளி எழுச்சி – பெருமாளை துயிலெழுப்புவது

TO BE CONTINUED…

Leave a comment