1) மகரிஷி வியாசரின் புத்திரர் சுகர் வாழ்ந்த ஸ்தலம் என்பதால் அவரின் திருநாமம் கொண்டே திருச்சுகனூர் என்று பெயர்பெற்றது இந்த பகுதி. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சானுர் ஆகியிருக்கிறது.
2) மகரிஷி வியாசரின் தந்தை பராசரர் வாழ்ந்து அடங்கியிருந்த இடமும் திருச்சுகனூர் அருகில் தான் அமைந்துள்ளது. இப்பகுதி இன்று யோகி மல்லாவரம் என்று அழைக்கப்படுகிறது, இதன் ஆதி பெயர் திரு பராசரேஸ்வரம்.
மகான்கள் அடக்கம் செய்யப்படுகிற இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவது தமிழர் வழக்கம். இதுவே யோகி மல்லாவரத்தில் உள்ள ஸ்ரீ பராசரேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்.
விஷ்ணு புராணத்தின் ஆசிரியரும் இவரே.
3) ஸப்தகிரியும் கூடுகின்ற இடத்தில் நின்ற திருக்கோலத்தில் வேங்கடவன்.
-
சேஷாத்ரி – பாற்கடலை விட்டு பரந்தாமன் கிளம்பியதும் ஆதிசேஷன் அவரை இங்கு மலையாக தாங்கினான்
-
நாராயணாத்ரி/ வேதாத்ரி – வேதங்களே மலை வடிவில் வந்து வேங்கடவனை துதிக்கிறது
-
கருடாத்ரி – கருடன் இருந்து சுமந்த மலை
-
விருஷபாத்ரி – அரக்கன் விருஷபாசுரனை வதம் செய்த மலை
-
அஞ்சனாத்ரி – வாயு புத்ரனான ஆஞ்சநேயனை அஞ்சனை தவம் இருந்து பெற்ற மலை
-
நீலாத்ரி – நீலாதேவியின் பெயரால் அழைக்கப்பட்ட மலை. இவள் தான் வேங்கடவனுக்கு முடிக்காணிக்கயை தொடங்கியவள்.
-
வேங்கடாத்ரி/ ஆனந்தாத்ரி – “வேம்” என்றால் பாவம் “அட” என்றால் நாசம். பாவங்களை நாசமாக்கும் மலை. இந்த மலையில் தான் மற்ற அனைத்து மலைகளும் கூடி நாராயணன் ஆனந்தமாக காட்சி அளிக்கிறான்.